பின் தொடர்வோர்

Friday 19 May 2017

304.தாமரையின்மட்டு

304
வயலூர்

           தானதன தத்த தானதன தத்த
                    தானதன தத்த                      தனதான

தாமரையின் மட்டு வாசமல ரொத்த
   தாளிணைநி னைப்பி             லடியேனைத்
தாதவிழ்க டுக்கை நாகமகிழ் கற்ப
   தாருவென மெத்தி                  யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
   வாவெனஅ ழைத்தென்             மனதாசை  
மாசினைய றுத்து ஞானமுத ளித்த
   வாரமினி நித்த                   மறவேனே
காமனையெ ரித்த தீநயன நெற்றி
   காதியசு வர்க்க                   நதிவேணி 
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
   காதுடைய அப்பர்                 குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
   சோலைபுடை சுற்று               வயலூரா 
சூடிய தடக்கை வேல்கொடுவி டுத்து 
   சூர்தலை துணித்த              பெருமாளே


பதம் பிரித்து உரை

தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த  
தாள் இணை நினைப்பு இல் அடியேனை

தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாமரையின் நறு மணம் வீசும் மலருக்கு ஒப்பான தாள் இணை நினைப்பு இல் - (உனது) இரண்டு திருவடிகளின் நினைப்பே இல்லாதஅடியேனை - அடியேனை

தாது அவிழ் கடுக்கை நாக(ம்) மகிழ் கற்ப
தாரு என மெத்திய விராலி

தாது அவிழ் கடுக்கை மகரந்தப் பொடி விரியும் கொன்றைநாகம் - சுர புன்னை மகிழ் மகிழ மரம் (முதலியவை) கற்ப தாரு கற்பக விருட்சம் என என்று சொல்லும்படியாக  மெத்திய மிகுந்த விராலி விராலி என்கின்ற

மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று
வா என அழைத்து என் மனது ஆசை

மா மாலையில் நிற்ப சிறந்த மலையில் வீற்றிருக்கின்றோம்  நீ கருதி உற்று வா நீ கருத்தில் கொண்டு வருவாயாக என அழைத்து என்று என்னை அழைத்து  என் மனது அசை - என்னுடைய மனதில் உள்ள ஆசைகளையும்

மாசினை அறுத்து ஞான அமுது அளித்த
வாரம் இனி நித்தம் மறவேனே

மாசினை  - (என்) குற்றங்களையும் அறுத்து ஒழித்து ஞான அமுது அளித்த ஞான அமுதத்தை எனக்குத் தந்த வாரம் -அன்பை இனி நித்தம் இனி எந்நாளும் மறவேனே மறக்க மாட்டேன்

காமனை எரித்த தீ நயன நெற்றி
காதிய சுவர்க்க நதி வேணி

காமனை எரித்த மன்மதனை எரித்த தீ நயன நெற்றி -நெருப்புக் கண்ணை உடைய நெற்றியையும் காதிய -எல்லாவற்றையும் அழிக்க வல்லதான   சுவர்க்க நதி ஆகாய கங்கையைச் சூடியுள்ள வேணி சடையையும்

கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட
காது உடைய அப்பர் குருநாதா

கானில் உறை காட்டில் இருக்கும் புற்றில் ஆடும் புற்றில் படம் எடுத்து ஆடுகின்ற பணி பாம்பை  இட்ட அணிந்த  காது உடைய அப்பர் காதுகளைக் கொண்ட சிவபெருமானுக்கு  குரு நாதா குரு நாதரே

சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க
சோலை புடை சுற்று வயலூரா

சோமனொடு சந்திரனோடு அருக்கன் சூரியனும் மீன் உலவும் நட்சத்திரங்களும் உலவும் (அளவுக்கு) மிக்க -உயர்ந்த சோலை புடை சுற்றும் - சோலைகள் பக்கங்களில் சுற்றியுள்ள 
வயலூரா - வயலூரில் வாழ்பவனே

சூடிய தடக் கை வேல் கொடுவித்து
சூர் தலை துணித்த பெருமாளே

தடக்கை சூடிய அகன்ற திருக் கரத்தில் ஏந்திய வேல் கொடு விடுத்து வேலைச் செலுத்தி சூர் தலை துணித்த பெருமாளே - சூரனுடைய தலையை வெட்டித் துணித்த பெருமாளே

சுருக்க உரை

தாமரை மலர் போன்று மணக்கும் உனது இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனைசெழிப்பான விராலி மலையில் வீற்றிருக்கின்றோம்அங்கு வந்து எம்மைத் தரிசிக்கவும் என்று என்னை அழைத்துஎன் ஆசைகளையும்குற்றங்களையும் அழித்துஞான அமுதத்தைக் கொடுத்த உன் கருணையை என்றும் மறக்க மாட்டேன்

மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணை உடையவரும்ஆகாய கங்கையைச் சூடிய சடையையும்பாம்பு அணிந்த காதுகளை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு குரு நாதரே உயர்ந்த சோலைகள் சூழ்ந்த வயலூரில் வாழ்பவனே திருக் கரத்தில் ஏந்திய வேலைச் செலுத்திச் சூரனுடைய தலையைத் துணித்த பெருமாளே எனக்கு ஞானம் அளித்த உன் கருணையை நான் என்றும் மறவேன்

விளக்கக் குறிப்புகள்

காதிய சுவர்க்க நதி
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு பரமேசர்          – திருப்புகழ், அழகுதவிழ்

புற்றிலாடு பணி இட்ட காதுடைய அப்பர்

 புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
  பற்றி வாழும் பரமனைப் பாடிட                           - சம்பந்தர் தேவாரம் 

No comments:

Post a Comment